வவுனியா மாவட்டம் சிதம்பர புரத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவினரால் இலவச கல்வி நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் மிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கல்வி நிலையத்தை திறந்துவைத்தார்.