2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை 5 அல்லது 6 வீதத்தால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும், நிவாரண கொடுப்பனவையும் வழங்கியுள்ளது.
ஆகவே 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். தேசிய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை 5 தொடக்கம் 6 வீதத்தால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.